Translate

Wednesday, April 12, 2023

Natural remedies

 

Natural Remedies.

privitha32@gmail.com
Natural remedies
  1. Herbal remedies: These remedies use plants and herbs to treat various ailments. For example, ginger can be used to ease nausea and vomiting, chamomile can help with insomnia and anxiety, and echinacea can boost the immune system.

  2. Essential oils: Essential oils are concentrated plant extracts that are used in aromatherapy to promote relaxation, relieve stress, and improve mood. For example, lavender oil is often used to promote relaxation, while peppermint oil can help with headaches and indigestion.

  3. Acupuncture: This is a traditional Chinese medicine practice that involves the insertion of thin needles into specific points on the body to help alleviate pain and promote healing.

  4. Yoga and meditation: These practices are known for their ability to reduce stress and improve overall health and well-being. They can also help with chronic pain, anxiety, and depression.

  5. Homeopathy: This is a natural form of medicine that uses diluted substances to help stimulate the body's natural healing processes.

It is important to note that while natural remedies can be effective, they should not be used as a substitute for medical advice or treatment. If you have a serious health condition or are experiencing severe symptoms, it is important to consult with a healthcare professional.

Saturday, May 29, 2021

கொரோனா என்ற covid 19 தாக்கத்தை கட்டுப்படுத்தும் தனி நபர் நடவடிக்கைகள்


 வணக்கம்,  நண்பர்களே.....நாம் இப்போது பார்க்கப்போவது நம் அனைவரையும் அச்சுருத்தும் கொரோனா என்ற covid 19 தாக்கத்தை கட்டுப்படுத்தும் தனி நபர் நடவடிக்கைகள் பற்றியது தான். ஆம் நண்பர்களே நாம் அனைவரும் தனி தனியே இணைந்தால் இந்த நோயை அழித்துவிடலாம். நாம் நம் மனதால் இணைவோம். "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" என்ற  பழமொழி படி நாம் மனதால் இந்த கொரோனா நோயை அழித்து நமக்கும் நமது தலைமுறையினரையும் காப்பாற்றுவோம்.


1. அரசாங்கம் சொல்வதுபோல் தனி நபர் இடைவெளியை கடைபிபியுங்கள்.

2. வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள் மீறி வெளியே செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணியுங்கள்.

3. கை கால் மற்றும் முகத்தினை அடிக்கடி தூய்மைப்படுத்திக்கொள்ளுங்கள்.

4. பாக்கெட் சானிடாய்ஸ்ர் கையில் வைத்துக்கொள்ளுங்கள்.

5. வீட்டில் தினமும் நீராவியால் ஆவி பிடியுங்கள்.

6. சூடான நீரையே அருந்துங்கள். காரமான உணவுகளை சாப்பிடுங்கள்.

7. குளிர்பானங்களை வாங்கி அருந்தாதிர்கள்.

8. நமது சுற்றுப்புறத்தை நாம் தான் தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

9. நமது உடலில் ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் தாமதிக்காமல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து சென்று அதற்கான உரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். நமக்கு கொரோனா வந்தால் நம்மை ஒதுக்கி விடுவார்கள் என்ற அட்சத்தில் வீட்டிலேயே இருந்தால் அது உங்களையும் உங்கள் அன்பர்கள் அனைவரையும் சேர்த்து பாதிக்கும். எனவே சற்றும் யோசிக்காமல் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

10. ஒரு முக்கியமான அவசியமான நடவடிக்கை என்னவென்றால் தயவு செய்து அனைவரும் கோரோனா தடுப்பூசியை  போட்டுக்கொள்ள வேண்டும். அதுவே தங்களுக்கும் தங்களை சார்ந்தவருக்கும் நன்மை பயக்கும்.

அனைவரும் ஒன்றிணைந்து இந்த தனிநபர் நடவடிக்கைகளை பின்பற்றுவோம் கொரோனா என்ற கொடிய நோயிலிருந்து விடுபடுவோம்....



Friday, March 26, 2021

சர்க்கரை நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து

 சக்கரை அளவு நாளுக்கு நாள் கூடிக்கிட்டே போகுதா கவலை வேண்டாம். இதோ இயற்கை முறை மாத்திரை.... நாம  இதை  கடையில் வாங்க வேண்டாம். வீட்டிலயே எளிய முறையில் தயார் செய்யலாம்.

முதலில் பெரிய பாகற்காய் அரை கிலோ எடுத்து அதை நன்கு பொடியாக நறுக்கி கொள்ளவும். பிறகு அதனை ஒரு மிக்ஸ்யில் போட்டு நன்கு விழுதாக அரைத்து கொள்ள வேண்டும். அதனை ஒரு பெரிய தட்டில் கொட்டி விடவும்.


அடுத்த பொருள் சின்ன வெங்காயம்... ஆமாங்க சின்ன வெங்காயம் இயற்கையாகவே இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் அதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். சின்ன வெங்காயம் கால் கிலோ எடுத்து அதனை தோல் உரித்து அதனையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து அதே தட்டில் கொட்டி இரண்டையும் ஒன்றாக கலந்து அதனை பரப்பி விடவும்.

அந்த தட்டினை நான்கு நாட்கள் வெயிலில் காயவைத்து கையில் எடுத்து உருட்டும் பதம் வந்தவுடன் அதனை சிறு சுண்டைக்காய் அளவிற்கு உருட்டி கொள்ளவும்.

அந்த உருண்டைகளை மீண்டும் வெயிலில் காயவைக்க வேண்டும். ஓரிரு நாட்களில் அது கெட்டி தன்மை அடைந்து மாத்திரை அளவிற்கு வந்துவிடும். இந்த மாத்திரைகளை தினமும் காலை இரவு இரண்டு மாத்திரை அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு பத்து நாட்கள் சாப்பிட்டு விட்டு பரிசோதனை செய்து பார்த்தால் சர்க்கரை உங்கள் கட்டுக்குள் இருக்கும். பிறகு ஒரு மாத்திரை அளவு எடுத்துக்கொண்டால் போதும்.

முயற்சி செய்து பாருங்கள். வளமுடன் வாழுங்கள்.

இயற்கை மருத்துவம்...

Wednesday, February 24, 2021

வெள்ளை முடியை, வேரிலிருந்தே நிரந்தரமாக கருப்பாக மாற்ற இந்த 1 காய் போதும். ட்ரை பண்ணி பாருங்க நண்பர்களே...

 வெள்ளை முடியை, வேரிலிருந்தே நிரந்தரமாக கருப்பாக மாற்ற இந்த 1 காய் போதும். ட்ரை பண்ணி பாருங்க நண்பர்களே...

நமக்கு வரக்கூடிய நரை முடியில் இரண்டு வகை உண்டு. ஒன்று இளமையிலேயே வரக்கூடிய இளநரை. இரண்டாவது 40 வயதிற்கு பிறகு வரக்கூடிய நரைமுடி. இதில் எந்த வகை வெள்ளை முடியாக இருந்தாலும் அதை வேரிலிருந்து கருப்பாக வளர வைக்கக்கூடிய ஒரு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இதில் பக்க விளைவுகள் வருவதற்கு ஒரு துளி அளவும் வாய்ப்பு கிடையாது. செயற்கையான முறைகளைப் பின்பற்றி நம்முடைய முடியை என்னதான் கலராக மாற்றினாலும் சரி, வேரிலிருந்து வளரும் போது அந்த முடி வெள்ளையாகத் தான் வளரும்.

நாம் எல்லோரும் அறிந்த, நம் சமையலுக்கு பயன்படுத்த கூடிய பீர்க்கங்காய் தான் அந்த காய். முதலில் ஒரு பீர்க்கங்காயை வாங்கி நன்றாக கழுவி சுத்தமாக துடைத்து காய வைத்து விடுங்கள். இதன் மேலே ஈரம் ஒரு துளி கூட இருக்கக் கூடாது.

அதன் பின்பு தோலுடன் இந்த பீர்க்கங்காயை மிகவும் பொடியாக நறுக்கி, ஒரு காட்டன் துணியின் மேல் பரவலாக வைத்து நிழலிலேயே உங்களுடைய வீட்டில் ஆற வைக்கவேண்டும். வெயிலில் வைத்து காய வைத்தால் அதில் இருக்கும் சத்துக்கள் நீங்கிவிடும். பீக்கங்காய் நிழலிலேயே காய்ந்து சுருங்கி வரும் வரை உலர வைத்துக் கொள்ளுங்கள்.



ஒரு சின்ன சைஸ் பீர்க்கங்காயை வெட்டி உலர வைத்துக் கொண்டால் 200ml அளவு செக்கு தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளவும். இரும்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடு செய்த பின்பு, உலர்ந்த பீர்க்கங்காய் துண்டுகளை அதில் போட்டு விடுங்கள். அதன் பின்பு கருஞ்சீரகப் பொடி 1 ஸ்பூன், நெல்லி பொடி 1 ஸ்பூன், வெந்தயப் பொடி 1 ஸ்பூன் இந்த மூன்று பொருட்களையும் அந்த எண்ணெயோடு சேர்த்து நன்றாக காயவைத்து அப்படியே அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்துவிட வேண்டும்.

இந்த எண்ணையை  தினமும் தலையின் வேர் கால்களில் படும்படி நன்கு தேய்த்து வர வேண்டும். ஒரு மாதத்தில் நல்ல மாற்றம் தெரியவரும். நன்றி.

ஒருமுறை இதை உங்களது முகத்தில் தடவினால், உங்களுக்கு ஒரு வயது குறையும். தினம் தினம் உங்களை இளமையாக மாற்றப்போகும் ரகசியம் இதுதான்.



உங்களுடைய முகம் கை கால்களில் சுருக்கமே இருக்கக்கூடாது என்று நினைக்கிறீர்களா? மிக சுலபமான மலிவான ஒரு குறிப்பை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.






இந்த பேசியல் செய்ய தேவையான பொருட்கள். வெந்தயப் பொடி – 1 ஸ்பூன், புளிக்காத தயிர் – 2 ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு – 1/2 ஸ்பூன்,ரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன், தேன் – 1 ஸ்பூன், அவ்வளவு தான். நல்ல வெந்தயப் பவுடர் கடைகளில் கிடைத்தால் வாங்கிக்கொள்ளலாம். இல்லை என்றால் உங்கள் வீட்டில் இருக்கும் வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து கண்ணாடி பாட்டிலில் சேகரித்த வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் வெந்தய பொடி, தயிர், லெமன் ஜூஸ், ரோஸ் வாட்டர், தேன் எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் 2 ஓட்டு ஓட்டி கொள்ள வேண்டும். இது வழுவழுப்பான பேஸ்டாக நமக்கு கிடைத்துவிடும். இதை ஒரு பவுலில் மாற்றிக் கொண்டு உங்களுடைய முகத்தில் கீழிருந்து மேல் பக்கமாக தடவிக் கொள்ளுங்கள். முகம் தவிர கை கால்களிலும் இந்த பேக்கை போட்டுக்கொள்ளலாம்.

தினமும் இந்த ஃபேஸ் பேக்கை முயற்சி செய்து பார்க்கலாம். ஒரு முறை போட்ட உடனேயே உங்களுடைய முகத்தில், நன்றாக வித்தியாசம் தெரியும். முகம் வழுவழுப்புத் தன்மையை பெற்றிருக்கும். அந்த அளவிற்கு சக்தி கொண்டது இந்த வெந்தயப்பொடி, பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது. குறிப்பாக வறட்சியான சருமத்தில் அதிகப்படியான சுருக்கத்தை கொண்டவர்களுக்கு இந்த குறிப்பு மிக மிக உதவியாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

Saturday, February 20, 2021

கண் பார்வை திறன் அதிகரிக்கும் சில வழிமுறைகள்.....

 அனைவருக்கும் வணக்கம்

 நான் உங்கள் சினேகிதி......

நான் எனது  அனுபவத்தினை உங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

தினமும் காலையில் சூரிய உதயத்தினை வெறும் கண்களால் பார்க்க வேண்டும். அதன் சிகப்பு நிற பந்து போன்ற வடிவினை பத்து நிமிடங்கள் பார்த்து கொண்டு வரவேண்டும்.


கண்களை அடிக்கடி இமைக்க வேண்டும்.

ஒரே இடத்தையோ அல்லது பொருளையோ பார்க்காமல் அடிக்கடி வேறு வேறு இடங்களை பார்க்க வேண்டும்.

கண்களை  மேலும் கிழுமாக சுழற்ற வேண்டும்.

சின்ன சின்ன கண் பயிற்சிகளை மேற்கொண்டு அதனுடன் சில உணவு முறைகளை பின்பற்றினால் நீங்களும் ஒளி பெற்ற கண்களை பெற முடியும்.

தினமும் ஒரு கேரட் ஒரு தேங்காய் பல் மற்றும் கொஞ்சம் பொன்னாங்கண்ணி கீரையை சேர்த்து கொள்ளவேண்டும்.



Natural remedies

  Natural Remedies. Natural remedies Natural remedies are alternative treatments that use natural ingredients and methods to help alleviate ...